Saturday, 13 May 2017

வாழ்க தமிழ், வளர்க தமிழினம் !!!


தாய்மொழியாம் எங்கள் தமிழ்மொழி
கல் தோன்றா முன் தோன்றிய மொழியாம் நம் தமிழ்மொழி
பண்டைய மொழிளில் பழமையான மொழி நம் தமிழ் மொழி
பாரினிலே சிறந்த மொழியாம் நம் தமிழ் மொழி
தமிழ் மொழி போல் இனிமை வேரெங்கும் காணோம்


இம்மொழிக்கு ஈடு நிகர் ஏதுமொழி
நன்மொழி நூறு மொழியானாலும்
எம்மொழி அதிலே முதன் மொழி
செம்மொழி எங்கள் தமிழ்மொழி
வாழ் நெறி சொல்லும் மொழி நம் தமிழ்மொழி
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு
நம் மொழியை போற்றி காப்பது நம் கடமை
தமிழன் என்று சொல்வது நம் உரிமை
அதனால் நமக்கு கிடைப்பது பெருமை
நம் மொழியை உணராமல் இருப்பது மடமை
தாயும், தாய் மொழியும் உடலும், உயிரும் போன்றது


தலைகீழ் நின்றாலும் தமிழ் எங்கள் தமிழே !
ஆங்கில மோகம் தலை விரித்து ஆடுது
நம் தமிழ் தவிச்சு நிக்குது
எங்கும், எதிலும் தமிழே என்று நாதம் ஒலிக்க
தமிழர் பெருமை உலகெல்லாம் மலர
தமிழ் மொழி எங்கும் புலர
தமிழா! தமிழால் ஒன்றுபடு!
வந்தே மாதரம் தந்தவன் தமிழன்!
வாய்மையே வெல்லும் என்றவன் தமிழன்!
தமிழனாய் தமிழை வணங்குகிறோம்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!


வாழ்க தாய்மொழி! வளர்க தமிழ்மொழி!

"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு"



உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.

யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!

- கவிப்பேரரசு வைரமுத்து 

"அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்" சொல்லிலும் செயலிலும் அன்பினையே போற்றுவன் தமிழன்.


உன் கற்புக்கு எதிராய் பேசுபவரை எதிர்பதை விட, உன் ( தமிழ்த் )  தாயின்  கற்புக் கெதிறாய் பேசுபவனை (செயல் படுபவனை) முதைலில் எதிர்த்திடு..



Friday, 12 May 2017

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா


தமிழனாய் பிறக்க நான் என்ன தவம் செய்தேனோ, தெரியவில்லை. அதிலும் தமிழ் கற்றவர்களுக்கு மகனாய் பிறந்து! தமிழ் அமுது ஊட்டி வளர்க்கப்பட மாதவம் செய்திருக்க வேண்டும்!!

வாழ்க தமிழ், வளர்க தமிழினம் !!!

தாய்மொழியாம் எங்கள் தமிழ்மொழி கல் தோன்றா முன் தோன்றிய மொழியாம் நம் தமிழ்மொழி பண்டைய மொழிளில் பழமையான மொழி நம் தமிழ் மொழி பாரினிலே சிறந்த...